சச்சினுக்கு கொடுத்த அந்த வாக்கு... சொன்ன சொல்லை காப்பாற்றிய கிங் - ஈடன் கார்டனில் பர்த்டே ட்ரீட்

x

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 37வது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்து 40 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்களில் வெளியேற கோலி-ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களுக்கு கேட்ச் ஆனார். ராகுல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினாலும், மகத்தான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, சதம் விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்தார். ஜடேஜா மற்றும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பால் 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.


Next Story

மேலும் செய்திகள்