"குரங்கு கைல பூமால.." - வேர்ல்ட் கப்-ஐ அவமதித்த விவகாரம்..! மார்ஷ் மீது போலீசில் புகார்

x

உலகக்கோப்பையை அவமதித்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது குஜராத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அறையில் மிட்செல் மார்ஷ் கோப்பை மீது காலை போட்டு, அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் பரவி சர்ச்சையானது. இந்த சூழலில், இந்திய பிரதமரையும், உலகக்கோப்பையையும் அவமதித்த மார்ஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவையை சேர்ந்த ராகுல் காந்தி என்பவர் குஜராத் டிஜிபி அலுவலகத்திற்கு E-mail மூலம் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்