கோப்பையை வெல்ல போவது யார்?..சென்னையில் இன்று மோதும்...இரண்டு பெரிய அணி

x

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிரைம் வாலிபால் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரைம் வாலிபால் லீக் தொடரில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கோழிக்கோடு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் அகமதாபாத்தை வீழ்த்தி, இரண்டாவது அணியாக டெல்லி அணியும் இறுதிப்போட்டியை எட்டியது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில், இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெரும் அணிக்கு ரூபாய் 40 லட்சமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 30 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்