விபத்துக்கு பின் மீண்டும் ஐபிஎல்...களம் காணும்...முக்கிய வீரர்?

x

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பங்கேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கார் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு குணமடைந்த பண்ட், முழு உடற்தகுதியை எட்டி இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று அளித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பண்ட்டின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும், பண்ட்டின் உடற்தகுதியைப் பொறுத்து அணியில் அவரது ரோல் இருக்கும் என்றும் பாண்டிங் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்