`இரட்டை சதம்' தூள் கிளப்பிய ஜெய்ஸ்வால் - 2வதுடெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை

x

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்தியா, 396 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரட்டை சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர் தனது அபார பந்துவீச்சால், 45 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா இங்கிலாந்தைவிட, 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்