T20 World Cup: இந்திய அணி வீரர்கள் திடீர் தடுமாற்றம்ஏமாற்றத்தில் ரசிகர்கள்

x

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து மோசமாக ஆடியுள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சில் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளனர். உலகக்கோப்பை அணி வீரர்களின் திடீர் மோசமான ஆட்டம், ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்