கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து கண்மூடித்தனமாக தாக்கிய இரு வீட்டார் - பதற்றத்தில் மூழ்கிய கிராமம்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே, இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு, கம்பு, கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருப்பாச்சேத்தி அருகே உள்ள வைகை மீனாட்சிபுரம் கிராமத்தில், உறவினர்களுக்குள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதில், இருதரப்பினரும், கட்டை மற்றும் கற்களால் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த 7 பேர், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Next Story