சேப்பாக்கில் சாமியாடிய ஆறுச்சாமி துபே.."என் சிக்ஸர்களின் சூட்சுமம் இதான்"

x

சேப்பாக்கில் சாமியாடிய ஆறுச்சாமி துபே.."என் சிக்ஸர்களின் சூட்சுமம் இதான்" - நெகிழ்ந்துபோன CSK ஃபேன்ஸ்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை வென்றார். தான் சந்தித்த முதல் 2 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பிய ஷிவம் துபே, 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும் 2 ஃபோரும் அடங்கும். ஆட்டநாயகன் விருது வென்றது தொடர்பாக பேசிய ஷிவம் துபே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற ஐபிஎல் அணிகளில் இருந்து மாறுபட்டது என்றும், சென்னை அணி தனக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும் கூறினார். அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் தான் ஆடுவதே அணியின் தேவை என்றும் துபே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்