முதல் சதம் அடித்த சஞ்சு சாம்சன்... தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்த இந்தியா

x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் போட்டி தொடரின் 3வது மற்றும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா, 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சதம் விளாசிய நிலையில், திலக் வர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஸி, 81 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது


Next Story

மேலும் செய்திகள்