ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 42வது முறை....பட்டத்தை தட்டி சென்ற மும்பை

x

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரஹானே தலைமையிலான மும்பை அணியும், அக்சய் வத்கர் தலைமையிலான விதர்பா அணியும் மோதின. போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை 224 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விதர்பாவோ வெறும் 105 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது. 2வது இன்னிங்சில் அபாரமாக விளையாடிய மும்பை 418 ரன்கள் குவித்தது. இளம் வீரர் முஷீர் கான் சதம் விளாசினார். ஷ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய விதர்பா, 2வது இன்னிங்சில் கடைசி நாளில் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை பவுலர் தனுஷ் கோட்டியன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை 42வது முறையாக ரஞ்சி கோப்பையை வசப்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்