இனி 60 நொடிகள் மட்டும் தான்.. மிஸ் ஆச்சுனா 5 ரன்கள் பெனால்டி - டிசம்பரில் அமலுக்கு வரும் விதி

x

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ள ஆடவர்களுக்கான சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில், சோதனை முயற்சியாக ஸ்டாப் வாட்ச் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில், ஒரு ஓவர் முடிந்ததும் அடுத்த ஓவரை வீசுவதற்கு, பந்து வீசும் அணி எவ்வளவு நேரத்தில் தயாராகிறது என்பது கணக்கிடப்படும். பந்து வீசும் அணி ஒரு ஓவரை வீசி முடித்த 60 நொடிகளுக்குள், அடுத்த ஓவரை வீச தயாராக வேண்டும். ஒருவேளை அடுத்த ஓவரை வீச தயாராவதற்கு, 3 முறை 60 நொடிகளை தாண்டி எடுத்துக்கொண்டால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்