தென் கொரியா - சீனா ஹாக்கி தொடர் - கடைசி நிமிடத்தில் பதறிய நெஞ்சம்

x

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், தென் கொரியா - சீனா இடையிலான லீக் போட்டி, வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது. எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் , 18-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் ஜாங் கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் தென் கொரியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் சீன வீரர் சென், பதில் கோல் அடித்தார். இதனையடுத்து, இரு அணியினரும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்