பிரக்ஞானந்தா பெற்றோருக்கு.. ட்விட்டரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்திரா நிறுவனம் | Mahindra

x

உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிப்பதாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்த பிரக்ஞானநந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யுவி 400 (XUV 400) மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என நினைக்கிறேன் என குறிப்பிட்டு என்ன சொல்கிறீர்கள்? என ட்விட்டரில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நிறுவன சிஇஓ 'யோசனை வழங்கியதற்கு நன்றி. எக்ஸ்யுவி 400 சிறப்பானதாக இருக்கும். விரைவில் எங்கள் குழு அவர்களை அணுகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்