"ரோகித் சர்மாவை போல்.." - வாசிம் அக்ரம் அதிரடி கருத்து

x

சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை போல் இன்னொரு வீரர் இல்லை என, பாகிஸ்தான் வேகபந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார். பேட்டிங் எளிதான விஷயம் என்பது போன்ற தோற்றத்தை ரோகித் சர்மா ஏற்படுத்துவதாகவும், எந்த சூழ்நிலையிலும், எந்த அணிக்கு எதிராகவும் அவர் தனது ஷாட்களை சுலபமாக ஆடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ரோகித் சர்மா பந்து வீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும், முதல் பந்திலிருந்தே ஆதிக்கம் செலுத்துவதாகவும் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்