ஐபிஎல் 2024 ஏலம்... வெளியான இறுதி பட்டியல் - CSKவின் வியூகம் என்ன..?

x

2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு பதிவு செய்துள்ள வீரர்களின் இறுதிப்பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 333 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் இந்திய வீரர்கள் 214 பேர் என்றும், வெளிநாட்டு வீரர்கள் 119 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 116 பேர் தேசிய அணிக்காக விளையாடியவர் என்றும், 215 பேர் தேசிய அணிக்காக விளையாடதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 அணிகளிலும் 77 வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனக்கான குறைந்தபட்ச ஏலத்தொகையாக 2 கோடி ரூபாயை 23 வீரர்களும், ஒன்றரை கோடி ரூபாயை 13 வீரர்களும் நிர்ணயித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்