உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்-வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல்

x

செர்பியாவில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் 53 கிலோ பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை ஜோன்னா மால்க்ரென் உடன் ஆன்டிம் பங்கல் மோதினார். இதில் 16க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் ஆன்டிம் பங்கல் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். இந்த வெற்றி மூலம், அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஆன்டிம் பங்கல் தகுதி பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்