"இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்தது ஜோதிடரா?".. அனுராக் தாகூர் சொன்ன பதில்

x

இந்தியக் கால்பந்து அணியின் வீரர்களை தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஜோதிடரை பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா? இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா? என நாடாளுமன்றத்தில் வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அனுராக் தாகூர், இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை சீல் இடப்பட்ட உறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், இது குறித்த விவரங்களை அரசு பகிர்ந்து கொள்ள இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்