"இந்தியா-பாக். தொடர் நடைபெறாது" - வெளியான அதிர்ச்சி தகவல்

x

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை, இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர், பிசிசிஐ எப்போதோ இந்த விவகாரத்தில் முடிவு எடுத்துவிட்டதாகக் கூறினார். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை இரு நாட்டு போட்டிகள் இருக்காது எனத் தெரிவித்த அனுராக் தாகூர், மக்களின் எண்ணமும் இதுதான் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்