எல்லா வீரர்களும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்... அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ

x

ஐபிஎல் தொடருக்காக சில இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி வருவதாக கூறப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது. தற்போது 40 உள்ளூர் போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களுக்கு, போட்டி நாளன்று தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளூர் வீரர்கள் குறைந்தபட்சம் 10 ரஞ்சி போட்டிகள் விளையாடி இருந்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் தர பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்