IND Vs SL அரையிறுதி யுத்தம் - யார் முதலில் உள்ளே?

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதவுள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. 6 வெற்றிகளை வசப்படுத்தியுள்ள இந்தியா, இன்று வெற்றி பெற்றால் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற இந்தியா தீவிரம் காட்டும்.... சீரற்ற நிலையில் இருக்கும் இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்த இன்றையப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். தோல்வியே காணாமல் பலம் மிக்க அணியாக விளங்கும் இந்தியாவை, சமாளிக்க இலங்கை இன்று கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.


Next Story

மேலும் செய்திகள்