ICU-வில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்... விமானத்தில் நடந்த சோக சம்பவம்

x

இந்திய கிரிக்கெட் வீர‌ர் மயங்க் அகர்வால் தற்போது, ரஞ்சி கிரிக்கெட் தொடரில், கர்நாடக அணியின் கேப்டனாக உள்ளார். திரிபுரா அணிக்கு எதிராக வெற்றிபெற்ற பிறகு, தனது அணியினருடன், அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு, 2 முறை வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அகர்தாலாவில் உள்ள மருத்துவமைனயில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே, விமானத்தில் தண்ணீர் என நினைத்து ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த‌தாலேயே தொண்டை எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்த‌தாக, திரிபுரா மாநில சுகாதாரத்துறை செயலாளர் கிரண் கிட்டே விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, மயங்க் அகர்வாலின் மேனேஜர் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மேற்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்