இலங்கைக்கு இன்னொரு இடியை இறக்கிய ICC

x

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதனிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த அந்நாட்டு அரசு தனிக்குழுவை நியமித்தது. இது ச​ர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்தது. மேலும், இலங்கை அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதுவரை எந்த சர்வதேச அணியிடனும் விளையாட கூடாது என்று ஐசிசி அறிவித்தது. எனவே, இலங்கை கிரிக்கெட் வாரியம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தொடரை தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்