ஸ்ரீசாந்தை பார்த்து சொல்லக் கூடாத வார்த்தையை சொன்ன கம்பீர் - பொங்கிய ஸ்ரீசாந்தின் மனைவி

x

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின்போது, ஸ்ரீசாந்தை ஃபிக்சர் என கம்பீர் கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீசாந்த், சமூக வலைதளங்களில் ஸ்ரீசாந்த் வேதனையை வெளிப்படுத்தினார். இந்நிலையில், கம்பீருக்கு ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கண்டனம் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தரக்குறைவாகவும், மூர்க்கத்தனமாகவும் கம்பீர் நடந்துகொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீசாந்துடன் இணைந்து விளையாடிய கம்பீர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்