மின்னல் தாக்கி மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி

x

இந்தோனேசியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்தார். மேற்கு ஜாவாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் நட்பு ரீதியிலான உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியின்போது எதிர்பாராத விதமாக வானிலை மோசமான நிலையில், கால்பந்து வீரர் ஒருவரை திடீரென மின்னல் தாக்கியதில், அவர் மைதானத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்