ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிக்கு கத்தார் முன்னேற்றம்

x

ஆசியக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு கத்தார் முன்னேறி உள்ளது. அல்-கோர் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கத்தாரும் உஸ்பெகிஸ்தானும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கத்தாரும் 2வது பாதியில் உஸ்பெகிஸ்தானும் ஒரு கோல் அடித்தன. இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனிலை வகித்தன. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கத்தார் த்ரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்