ஆப்கானை உலுக்கிய நிலநடுக்கங்கள் - "இந்த வெற்றி ஆறுதலாக இருக்கும்" - ரஷீத் கான் உருக்கம்

x

தங்களது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என, அந்தநாட்டு வீரர் ரஷீத் கான் கூறியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ருசித்தது. இந்தநிலையில் போட்டிக்கு பிறகு பேசிய அந்த நாட்டு வீரர் ரஷீத் கான், இந்த வெற்றியால் தங்கள் நாட்டு மக்கள் பெருமைப்படுவார்கள் என தெரிவித்தார். தங்கள் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 2 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் மக்களின் முகத்தில் சிறிய புன்னகையை ஏற்படுத்தும் எனவும், வெற்றியால் கடினமான நாட்களை அவர்கள் கொஞ்சம் மறப்பார்கள் எனவும் உருக்கமாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்