போலி வீடியோக்களை வைத்து விளம்பரம்...சச்சினையும் விட்டு வைக்காத டீப் ஃபேக் - அதிர்ச்சியில் சச்சின்

x

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட் உள்ளிட்டோரின் முகத்தை வைத்து உருவாக்கப்பட்ட DEEP FAKE வீடியோ மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. தற்போது டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் முகத்தை வைத்து ஆன்லைன் செயலிக்கு விளம்பரம் செய்தது சர்ச்சையாகியுள்ளது. அந்த செயலி மூலம் தனது மகள் சாரா டெண்டுல்கர் அதிகளவில் பணம் சம்பாதிப்பதாக தான் பேசுவது போன்று போலி வீடியோ பரவுவதாக சச்சின் பகிர்ந்துள்ளார். போலி வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் சச்சின் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்