கால் வைத்தது லக்னோ.. வேட்டையாட காத்திருக்கும் சென்னை.. காத்திரு பகையே

x

வரும் 23 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி. இவ்விரு அணிகள் மோதும் இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால் லக்னோ அணி சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் கே எல் ராகுலை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் இட்டு வரவேற்ற நிலையில் தற்போது அந்த அணி வீரர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையிலான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி வெற்றி நிலையில் அந்த வெற்றியை தக்க வைக்க முயற்ச்சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த தோல்வியை இம்முறை வெற்றியாக மாற்ற சென்னை அணி தீவிரமாக முனைப்பு காட்டும் என்று நம்பப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்