செஸபிள்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்; போராடி தோல்வியடைந்த இந்திய வீரர் - பட்டம் வென்ற சீன வீரர்..!

x

செஸபிள்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்; போராடி தோல்வியடைந்த இந்திய வீரர் - பட்டம் வென்ற சீன வீரர்..!

செஸபிள்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.உலக அளவில் தலைசிறந்த16 வீரர்கள் பங்கேற்ற செஸபிள்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர், ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில், சீன வீரர் டிங் லிரன் உடன் இளம் வீரர் பிரக்ஞானந்தா மோதினார். இரண்டு சுற்றுகளாக இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில், முதல் சுற்றில் சீன வீரர் வெற்றி பெற்றார். எனினும், 2வது சுற்றில் சிறப்பாக ஆடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதனால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டை-பிரேக்கர் சுற்று பின்பற்றப்பட்டது. டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா சிறிய தவறு செய்த நிலையில், சீன வீரர் டிங் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், செஸபிள்ஸ் செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பிரக்ஞானந்தா பெற்று உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்