சென்னையில் இளம் வீரர்களுக்கு விருது வழங்கிய CSK வீரர்

x

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த இளம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, விருதும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 8 வயது செஸ் வீராங்கனை ஷர்வானிகா, பாரா தடகள வீராங்கனை கீர்த்திகா உள்ளிட்ட 10 பேருக்கு, விருதும், தலா 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தீபக் சஹார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்