500 விக்கெட்டுக்கு 500 தங்கக்காசு.. அஸ்வினுக்கு TNCA கொடுத்த சர்ப்ரைஸ்

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அஸ்வின் தனது குடும்பத்துடன் விழாவில் பங்கேற்றார். பாராட்டு விழாவில் அஸ்வினுக்கு 500 தங்க நாணயங்கள் அடங்கிய நினைவுப் பரிசும், 1 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனது ஆரம்ப கால நாட்களை நினைவுகூர்ந்து அஸ்வின் நெகிழ்ச்சிபட பேசினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வழங்கிய வாய்ப்புகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி தெரிவிப்பேன் எனக் கூறினார். தன்னுடைய ஆன்மா எப்போதும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும் என்றும் அஸ்வின் உருக்கமாகப் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்