மத்திய அரசின் எதிர்பாரா இன்ப செய்தி... பாலை வார்த்த அனுராக் தாகூர்

x

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அனுராக் தாகூர், அனைத்து விதமான கேலோ இந்தியா போட்டிகளிலும் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் என வரைமுறைகள் மாற்றி அமைக்கப்படுவதாகவும், இது விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார். விளையாட்டில் இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாக இதுபோன்ற மாற்றங்கள் உதவும் என்றும் அனுராக் தாகூர் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்