தோல்விக்கு பின் BCCI அதிரடி அறிவிப்பு..! | BCCI | Cricket

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடருக்கான, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வியாழக்கிழமை முதல், டிசம்பர் 3ஆம் தேதி வரை, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இதில் விளையாட உள்ள இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசி இரண்டு டி20 போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், குவஹாத்தி, ராய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்