ஆசிய கோப்பை கிரிக்கெட் - நேபாளை தூக்கி சாப்பிட்ட இந்தியா - சூப்பர் 4 க்குள் நுழைந்தது

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், நேபாளம் அணியை வீழ்த்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கையின் கண்டியில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி, 48 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 230 ரன்கள் எடுத்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், 23 ஓவர்களில் 145 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல், இந்த இலக்கை இந்திய அணி சுலபமாக எட்டியதோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்