காயத்திலிருந்து மீண்டு வந்ததும் அடித்த லக்.. கேப்டன் ஆகும் ரிஷப் பண்ட்

x

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தற்போது உடல்நிலை தேறி வருகிறார். இந்த நிலையில் அவர், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவார் என, அந்த அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்