3வது ஒருநாள் போட்டி... 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் கால் பதித்த நியூசிலாந்து

x

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆடம் மில்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து, 35வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. யங் மற்றும் நிக்கோல்ஸ் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரை 2க்கு பூஜ்யம் கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்