ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி ரூபாய்க்கும், தோனியை 12 கோடி ரூபாய்க்கும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய்க்கும்ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி
ரோஹித் சர்மாவை 16 கோடி ரூபாய்க்கும், ஜாஸ்பிரீத் பும்ராவை 12 கோடி ரூபாய்க்கும், சூர்யகுமார் யாதவை 8 கோடி ரூபாய்க்கும் கைரன் பொலார்ட் 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
விராட் கோலியை 15 கோடி ரூபாய்க்கும் கிளென் மேக்ஸ்வெல்ஙை 11 கோடி ரூபாய்க்கும் முகமது சிராஜை 7 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த்தை16 கோடி ரூபாய்க்கும் அக்சர் படேலை 9 கோடி ரூபாய்க்கும், பிரித்வி ஷாவை 7.50 கோடி ரூபாய்க்கும்,
அன்ரிச் நோர்க்கியாவை 6.50 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸலை 12 கோடி ரூபாய்க்கும்
வருண் சக்ரவர்த்தியை 8 கோடி ரூபாய்க்கும் வெங்கடேஷ் ஐயரை 8 கோடி ரூபாய்க்கும் சுனில் நரைரை 6 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.
இதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடி ரூபாய்க்கும்,
அர்ஷ்தீப் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை 14 கோடி ரூபாய்க்கும்
அப்துல் சமத் மற்றும் உம்ரான் மாலிக்கை தலா 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை14 கோடி ரூபாய்க்கும், ஜாஸ் பட்லரை 10 கோடி ரூபாய்க்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.
Next Story