டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா தகுதி
x
இன்று நடைபெற்ற ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாமை எதிர்கொண்ட ரவிக்குமார் முதலில் பின் தங்கியே இருந்தார். இருப்பினும், கஜகஸ்தான் வீரரை கீழே சாய்த்ததன் அடிப்படையில் ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம், இறுதிப் போட்டிக்கும் அவர் முன்னேறி உள்ளதால், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்