டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டி - நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் தோல்வி அடைந்தார்.
x
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டாவை ஜோகோவிச் எதிர்கொண்டார். முதல் செட்டில் சுமாராக ஆடிய ஜோகோவிச், அதனை 6-க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயின் வீரரிடம் தாரைவார்த்தார். தொடர்ந்து டைபிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இருப்பினும், வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை ஸ்பெயின் வீரர் புஸ்டா, 6-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த தோல்வியால் வெண்கலப் பதக்கத்திற்கான வாய்ப்பையும் ஜோகோவிச் நழுவவிட்டுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன், நம்பர் 1 வீரராக திகழும் ஜோகோவிச்சிற்கு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பெரும் ஏமாற்றத்தையே தந்து உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்