மீராபாய் சானுவுக்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பதவி - மணிப்பூர் மாநில அரசு திட்டம்
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் மாநில அரசு, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பதவி வழங்கி கவுரவிக்க உள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் மாநில அரசு, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பதவி வழங்கி கவுரவிக்க உள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீராபாய் சானுவுக்கு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பதவி வழங்க முடிவெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீராபாய் சானு, தற்போது இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story