இந்தியா Vs நியூசி. நாளை 2வது டெஸ்ட் போட்டி - தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம்

இந்தியா - நியூசிலாந்த் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி. நாளை 2வது டெஸ்ட் போட்டி - தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம்
x
இந்தியா - நியூசிலாந்த் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக  இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். கேப்டன் கோலி, புஜாரா, பந்து வீச்சாளர்கள் பும்ரா ஆகியோர் சாதிக்க தவறி வருவது இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே, 2வது டெஸ்ட் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்