"மார்ச் 29 முதல் ஐபிஎல் திருவிழா : பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு"

கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்
மார்ச் 29 முதல் ஐபிஎல் திருவிழா : பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு
x
13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி, மே 24 ஆம் தேதிவரை நடைபெறுமென பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்   பேசிய அவர், போட்டிகள், வழக்கம்போல் 8 மணிக்கு தொடங்கும் எனவும், இறுதிபோட்டியானது, மும்பையில் நடக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், போட்டியின்போது, பலத்த காயம் ஏற்படும் வீரருக்கு பதில், மாற்று வீரர் களமிறங்கும் முறை, இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர், கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்