இந்தியா Vs இலங்கை 3வது டி-20 - இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான 3வது டி -20 போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா Vs இலங்கை 3வது டி-20 - இந்தியா அபார வெற்றி
x
புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் , தவான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். தொடக்க விக்கெட்டுக்கு ராகுல் , தவான் இணை 97 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் மணிஷ் பாண்டே , சர்துல் தாக்கூர் இணை சிறப்பாக ஆட இந்தியா 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது..


தொடர் நாயகள் விருது - நவ்தீப் சைனி

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. 30 ரன்களுக்குள் இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் மேத்யூஸ் - சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை 100 ரன்கள் கடந்தது. இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி இலங்கையை 123 ரன்களில் சுருட்டினர். இந்த வெற்றியின் மூலம் தொடரையும் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. 



Next Story

மேலும் செய்திகள்