இறுதி போட்டிக்கு முதலில் தகுதிப் பெறுவது யார்? : சென்னை, மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.
இறுதி போட்டிக்கு முதலில் தகுதிப் பெறுவது யார்? : சென்னை, மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
x
கடந்த ஒன்றரை மாதமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐ.பி.எல். போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், முதல் குவாலிஃபையர் போட்டியில் மூன்று முறை சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும், தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் முதல் குவாலிஃபையரிலேயே வெற்றி பெற்று எளிதாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் முனைப்புடன் சென்னை, மும்பை அணிகள் உள்ளன. நடப்பு சீசனில் மும்பைக்கு எதிரான 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்கும் உத்வேகத்துடன் தோனி தலைமையிலான சென்னை அணி உள்ளது. இன்றைய போட்டியில் காயம் காரணமாக சென்னை அணியில் கேதர் ஜாதவ் களமிறங்குவதில் கேள்விக்குறியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்