ஐபிஎல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆர்வம்

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. வருகின்ற 1ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடள்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
ஐபிஎல் டிக்கெட் விற்பனை ரசிகர்கள் ஆர்வம்
x
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்திலும், ஆன்லைனிலும்  துவங்கியுள்ளது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டாலும், இறுதி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் குவாலிபையர் 1-இல் இடம்பெற்று சென்னையிலேயே விளையாடும் வாய்ப்பை பெறும். இல்லையென்றால் மற்ற அணிகளை விட குறைவான நெட் ரன் ரேட் பெறும் பட்சத்தில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் விளையாட நேரிடும். அதன்படி சென்னை அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசி லீக் ஆட்டமாக இந்த போட்டி அமையும். இதனால்  வழக்கத்தைவிட ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தால் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்