சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.
சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர். ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. வரும் 23ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அணியின் முக்கிய வெளிநாட்டு வீரர்களான வாட்சன், பிராவோ ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். சென்னைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக வாட்சன் வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் வாட்சன் தொடர் நாயகன் விருது வென்றுள்ளதால், இந்த சீசனிலும் அவர் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்