முதல் முறையாக அதீத சூரிய வெளிச்சத்தால் கிரிக்கெட் போட்டி தடைப்பட்ட சம்பவம்

மைதான அமைப்பால் தடைபட்ட போட்டி
முதல் முறையாக அதீத சூரிய வெளிச்சத்தால் கிரிக்கெட் போட்டி தடைப்பட்ட சம்பவம்
x
மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக அதீத சூரிய வெளிச்சத்தால் கிரிக்கெட் போட்டி தடைப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. அப்போது மாலை நேரத்தில் சூரியனின் ஒளி பேட்ஸ்மேனுக்கு நேராக இருந்தது. இதனால் பந்தை காண இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து சூரியன் மறையும் வரை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த அபூர்வ சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்