ஐ.சி.சி. மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி - கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர், சதம் அடித்து சாதனை
நியூசிலாந்துக்கு எதிராக, இந்தியா 194 ரன் குவிப்பு
ஐ.சி.சி. மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியைச் சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர், 49 பந்துகளை சந்தித்து சதமடித்து அசத்தினார். மொத்தம் 51 பந்துகளை சந்தித்த அவர், 103 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். கவுர், மகளிர் டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்
Next Story