மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா?
x
2015 ஆம் ஆண்டு முதல், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி, தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.இந்நிலையில், இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி அல்லது ஆட்டம் சமன் செய்யப்பட்டால், இந்திய அணி தொடரை கைப்பற்றும். அத்துடன், மேற்கு இந்திய தீவுகளுடன் தொடர்ந்து 8 வது ஒருநாள் தொடரை கைப்பற்றிய சாதனையை இந்தியா தனதாக்கி கொள்ளும். இதுவரை எந்த தொடரிலும் இல்லாத அளவிற்கு இந்திய பேட்ஸ்மேன்கள், இந்த தொடரில் இதுவரை 6 சதங்களை பூர்த்தி செய்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இன்றைய போட்டியிலும், வென்று இந்தியா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்