மே.இ.தீவுகள், ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - இந்திய அணியிலிருந்து தோனி அதிரடி நீக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸதிரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள், ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - இந்திய அணியிலிருந்து தோனி அதிரடி நீக்கம்
x
* மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸதிரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  

* வரும் நவம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா பங்கேற்கிறது.  

* மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர், குர்னல் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கும் இதே அணியில்கேப்டனாக கோலி திரும்புறார். 

* இருபது ஓவர் அணியிலிருந்து அனுபவ வீரர் தோனி நீக்கப்பட்டுள்ளார். இதனால் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 

* வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

* இதில் தமிழக வீரர் முரளி விஜய், ரோஹித் சர்மா , பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். 

* கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பந்த், பிரித்திவி ஷா, ஹனுமா விஹாரி உள்ளிட்ட இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மற்ற பெரிய மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 



Next Story

மேலும் செய்திகள்